சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் சார்பில் ஓவியப் போட்டி

சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் கோவையில் அமைந்துள்ள ஒரு முன்னணி கட்டிட வடிவமைப்பு கல்லூரி ஆகும். இதன் சார்பாக 5ம் ஆண்டு ''சித்திரம் 2016'' என்னும் ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தியாவின் விழாக்கள் என்னும் தலைப்பில் வரும் நவம்பர் 22ம் தேதியன்று காலை 9.30 மணி முதல் பகல் 3.30 மணி வரை அக்கல்லூரி வளாகத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் 350க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்குபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிக்கான சிறப்பு விருந்தினராக கலை ஹவுஸ் செயல்திட்ட மேலாளர் பிரிஜெட் சிபு பங்குபெற உள்ளார். சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சரின் நிறுவனர் ஆர்.சுவாமிநாதன், அவரது மனைவி ராஜலட்சுமி சுவாமிநாதன், அரங்காவலர் சுச்சி ராஜ்தீபன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ள உள்ளனர். பேராசிரியர் முகமது அலி சாரிப் இப்போட்டிக்கு தலைமை தாங்க உள்ளார்.

மாணவர்களின் படைப்புகள் நிபுனர் குழுவால் மதிப்பிடப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஓவியப் போட்டிகள் மட்டுமின்றி மலர்களைக் கொண்டு ஓவியம் உண்டாக்குதல், துணிகளுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...