தவறான சிகிச்சையால் கல்லூரி உதவி பேராசிரியர் உயிரிழப்பு ?


நீலகிரி மாவட்டம், குயில்ஹில் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி வைலட். இவர்களது இளைய மகள் அருள்மொழி மற்றும் மூத்த மகள் கவிதா (24). 

கவிதா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கல்லூரி விடுமுறைக்காக நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்படவே பாலு, குன்னூரியில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவிதாவுக்கு மருந்து கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்த கவிதா மருந்தினை உட்கொண்ட சில நிமிடங்களிலேயே உடல் முழுவதும் அழற்சி ஏற்பட்டு, கை, கால்கள் கருப்பு நிறத்தில் மாறியுள்ளது. மீண்டும், அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் அழற்சி அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து கவிதா, கோவையில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் வியாழனன்று உடல் நிலை மிகவும் மோசமடைந்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, அவரது பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவலர்கள் குன்னூர் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...