''வாட்ஸ்அப்''-யில் உலா வரும் தகவல் திருட்டுக் கும்பல்- பயனாளர்களே உஷார்...!


பிரபல தகவல் பரிமாற்றும் வாட்ஸ்அப் செயலியானது உலகில் பல கோடி மக்களால் அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்த உண்மையே. மக்களின் பெரிதும் கவரும் வகையில் வாட்ஸ்அப் அவ்வப்போது பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் புதிதாக இணைக்கப்பட்டது தான் வீடியோ கால் வசதி. இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் என அனைத்து பயனாளர்களுக்கும் அதிராகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

தற்போது இந்த வீடியோ கால் வசதியினைப் பெற பலரும் தங்களது கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்து அந்த வசதியினைப் பெற்று வருகின்றனர். 

இதனிடையே, வாட்ஸ்அப்-யில் வீடியோ கால் வசதியினைப் பெற இந்த லின்க்கை க்ளிக் செய்யவும் என ஒரு இணையதள குறியீடு உலா வந்துகொண்டிருக்கிறது. அதனை க்ளிக் செய்வதன் மூலம் நம் வாட்ஸ்அப் செயலியில் உள்ள தங்களை குறித்த பல தகவல்கள் வேறொரு நபர் மூலம் திருடப்படுவது பெரும்பாலானோர் அறியாத உண்மை.

இந்த தவறான போலி இணையதள லின்க்கானது வாட்ஸ்அப் அல்லாது சில தகவல் திருடும் தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், வாட்ஸ்அப் பயனாளர்கள் இவ்வாறான போலி லின்க்கினை தவிர்த்துவிட வேண்டும் எனவும்  அந்நிறுவனத்தின் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...