கோவை, கொடிசியா கூட்டரங்கில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாம் மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சி இணைந்து வீடுகளிலும் சூரியஒளி மின்சார மேற்கூரை தகடுகள் அமைக்கும் திட்டம் தொடர்பான கருத்தரங்கு கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாமை கூடுதல் தலைமை செயலாளர் ஜக்மோகன் சிங் ராஜூ முன்னிலை வகித்தார். இதில், கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாம் பொது மேலாளர்கள் இந்துமதி, பாலகிருஷ்ணன் மற்றும் சூரியஒளி மின்சார நிறுவனங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
