கோவை மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளில் நடந்த பருவத் தேர்வுகளுக்கு வினாத்தாள் அச்சடித்ததில் கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவரை உடனடியாக பணி இட மாற்றம் செய்யவேண்டும் என கூறி தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் வின்செண்ட் பால் ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தொடர்ந்து ஆசிரியர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். கல்வித்துறைக்கு கட்டுப்படாமல் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார். தொடக்க கல்வித்துறை உடனடியாக தலையிட்டு அவரை பணி இடமாற்றம் செய்யவேண்டும்' என்றார்.

இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் வின்செண்ட் பால் ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தொடர்ந்து ஆசிரியர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். கல்வித்துறைக்கு கட்டுப்படாமல் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார். தொடக்க கல்வித்துறை உடனடியாக தலையிட்டு அவரை பணி இடமாற்றம் செய்யவேண்டும்' என்றார்.