சென்னை : 'தமிழகத்தின் தென் மாவட்டங்களில், வரும், 22ம் தேதி வரை, மிக கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பரவலாக மழை :
இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது போல, நவ., 13 முதல் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும், தென் தமிழக கடலோர பகுதிகளிலும், பரவலாக மழை பெய்கிறது. நேற்று காலை, 8:00 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், திருவாரூர் மாவட்டத்தில், அதிக பட்சமாக, 4 செ.மீ., மழை பெய்துள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், பரவலாக மழை பெய்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு :
'தென் கிழக்கு வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த மண்டலம், இரு தினங்களில் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்பதால், தென் மாவட்டங்களில், வரும், 22 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.