ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக கழிப்பறை தினம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "யூ அண்ட் ஐ" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இன்று இப்பேரணியை நடத்தியது. இப்பேரணியில், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு சென்றனர்.

இது குறித்து கோவை 'யூ அண்ட் ஐ' நிறுவனத்தின் தலைவர் சோனி அகுஜா பேசுகையில்:- நவம்பர் 19-ம் தேதி உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படாத இந்தியாவை உருவாக்க வேண்டும் எனவும் தூய்மை இந்தியா இயக்கம் தெரிவித்துள்ளது. இதனை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'ஹாப்பி பீட்' என்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

இதில் திறந்த வெளி கழிப்பறை முற்றிலுமாக தடுப்பதற்கும், குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான வகையில் கழிப்பறை வசதி செய்து கொடுப்பது போன்றவற்றையே 'யூ அண்ட் ஐ' நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிறுவனம் குறைந்த நபர்களால் தொடங்கப்பட்டு, இன்று இந்தியாவில் 10 நிறுவனங்கள் உள்ளதாக அவர் கூறினார்.


இது குறித்து கோவை 'யூ அண்ட் ஐ' நிறுவனத்தின் தலைவர் சோனி அகுஜா பேசுகையில்:- நவம்பர் 19-ம் தேதி உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படாத இந்தியாவை உருவாக்க வேண்டும் எனவும் தூய்மை இந்தியா இயக்கம் தெரிவித்துள்ளது. இதனை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'ஹாப்பி பீட்' என்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

இதில் திறந்த வெளி கழிப்பறை முற்றிலுமாக தடுப்பதற்கும், குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான வகையில் கழிப்பறை வசதி செய்து கொடுப்பது போன்றவற்றையே 'யூ அண்ட் ஐ' நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிறுவனம் குறைந்த நபர்களால் தொடங்கப்பட்டு, இன்று இந்தியாவில் 10 நிறுவனங்கள் உள்ளதாக அவர் கூறினார்.
