உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி

ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக கழிப்பறை தினம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "யூ அண்ட் ஐ" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இன்று இப்பேரணியை நடத்தியது. இப்பேரணியில், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு சென்றனர்.



இது குறித்து கோவை 'யூ அண்ட் ஐ' நிறுவனத்தின் தலைவர் சோனி அகுஜா பேசுகையில்:- நவம்பர் 19-ம் தேதி உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படாத இந்தியாவை உருவாக்க வேண்டும் எனவும் தூய்மை இந்தியா இயக்கம் தெரிவித்துள்ளது. இதனை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'ஹாப்பி பீட்' என்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.



இதில் திறந்த வெளி கழிப்பறை முற்றிலுமாக தடுப்பதற்கும், குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான வகையில் கழிப்பறை வசதி செய்து கொடுப்பது போன்றவற்றையே 'யூ அண்ட் ஐ' நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிறுவனம் குறைந்த நபர்களால் தொடங்கப்பட்டு, இன்று இந்தியாவில் 10 நிறுவனங்கள் உள்ளதாக அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...