கோவை பீளமேடு பகுதியை அடுத்த குமுதம் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35). சம்பவத்தன்று சரவணன் வழக்கம்போல வேலைக்கு சென்றார். வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து அங்கு தனியாக இருந்த சரவணனின் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டினார். மேலும், அந்த பெண் அணிந்திருந்த 3 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றார்.
இது குறித்து சரவணன் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து சரவணன் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.