இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில் 'ஒன்றிணைவோம்' கருத்தரங்கு

கோவை: அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் கோவை இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் 'ஒன்றிணைவோம்' என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தில் உள்ள தொழில் வர்த்தக சங்கங்களின் அனைத்து தலைவர்களையும், பொறுப்பாளர்களையும் இணைக்கவும் நம் மாநிலத்திற்கு முன்னேற்றத்தையும் வளத்தையும் கொண்டுவருவதற்குமான ஒரு முன்முயற்சியே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம்.



இந்நிகழ்ச்சியில், சுமார் 18 தொழில் வர்த்தக சங்கங்கள் கலந்து கொண்டது. வணிக அமைப்புகள் நம் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல என்னென்ன செய்யவேண்டும் என்பது தொடர்பான கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டது. மேலும் தமிழக பொருளாதாரத்தில் சில முக்கிய பிரச்சனைகளாக பல வகைகளில் பாதிப்பவை.




1. வரும் 1 ஏப்ரல் 2017ம் தேதி முதல் அமலாக்கவிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை.
2. ரொக்க பணமில்லாத பொருளாதாரத்தை உருவாக்கும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை.
3. தொழிலாளர் நிர்வாகம் போன்றவை, எப்படி தீர்ப்பது என முடிவு செய்வதே இதன் முக்கிய நோக்கம். 

'ஒன்றிணைவோம்' என்பது தமிழக முன்னேற்றத்திற்கு அவசியமான தளங்களில் தொழில் வர்த்தக அமைப்புகள் அரசாங்கத்துடன் இணைந்து  செயல்படுவதற்கான ஓர் அமைப்பு. இதில், உங்களது முயற்சியில் பங்கெடுத்து மதிப்பு மிகுந்த கருத்துக்களை முன்வைத்து பொது விவாதங்களை உருவாக்கி உரிய விளைவுகள் ஏற்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கே கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...