சரக்கு விமானத்தில் ரூபாய் நோட்டுகளை கொண்டு வர முடிவு

புதிய ரூபாய் நோட்டுகளை சரக்கு பெட்டக லாரிகளில் எடுத்து வருவதற்கு காலதாமதமாவதால், சரக்கு விமானத்தில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் நாசிக், மைசூரில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. சரக்குப் பெட்டக லாரிகளில் வரும் இந்த பணம் ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகத்தில் இறக்கப்பட்டு, அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.

சரக்கு பெட்டக லாரிகளில் ரூபாய் நோட்டு கொண்டு வருவதற்கு ஓரிரு நாள்கள் ஆவதால் பணம் பட்டுவாடாவில் தாமதம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க சரக்கு விமானங்கள் மூலம் ரூபாய் நோட்டுகளை கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதன் மூலம் சுமார் ஒரு மணி நேரத்தில் பணம் சென்னை வந்து சேர்ந்து விடும்.

இதன்படி, திங்கள்கிழமை முதல் இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:- ரிசர்வ் வங்கிக்கு பணம் தேவையான அளவு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் சென்னையில் இயங்கும் 2 ஆயிரம் வங்கிக் கிளைகளுக்கு பிரித்து அனுப்புவதில்தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் எடுத்து வந்தால் தாமதம் இல்லாமல் விரைந்து வங்கிக் கிளைகளுக்கு அனுப்ப முடியும்.

முன்பு தனியார் வாகனங்களிலும் பணம் எடுத்து செல்லப்பட்டது. ஆனால் இப்போது அரசு வாகனங்களிலும், வங்கி கிளையில் இருந்து நேரடியாக வந்தும் பணங்களை எடுத்து செல்வதாலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...