வடகிழக்கு பருவ மழை, வரி வசூல் உள்ளிட்ட பணிகள் குறித்து தமிழக வருவாய் துறை செயலாளர் கோவையில் ஆய்வு


தமிழக அரசு வருவாய்த்துறை செயலர் சந்திரமோகன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஹரிஹரனுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில், அரசு வருவாய்த்துறை செயலர் சந்திரமோகன், கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள இயற்கை இடர்பாடுகளுக்கான முன்னேற்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு செய்தார். 

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள், நிலுவையிலுள்ள மனுக்கள், அம்மா திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவ மழையினைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், மாவட்டத்தில் அமைந்துள்ள அணைகளின் நீர்மட்டம், மழையளவு ஆகியன குறித்து கேட்டறிந்தார். 

மேலும், வருவாய் வசூல் சட்டம், நிலவரி, நகர்ப்புற நிலவரி ஆகியவற்றின் கீழ் அரசுக்கு வர வேண்டிய நிலுவைத்தொகைகள் குறித்து ஆய்வு செய்தார். நிலுவைத்தொகைகளை விரைந்து வசூல் செய்யவும் அவர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, பட்டா மாறுதல், ஆன்லைன் சான்றிதழ்கள் ஆகிய மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி மற்றும் சின்னச்சாமி மற்றும் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...