ஓவியக் கண்காட்சி மூலம் திரட்டிய தொகையை திருநங்கைகளின் கல்விக்காக வழங்கும் திருநங்கை கல்கி


கோவை மாவட்டம், அவநாசி சாலையில் அமைந்துள்ள ஜென்னி கிளப்பில் திருநங்கைகளை நினைவுகூறும் வகையில் ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இதற்கு ஏற்பாடு செய்திருந்த திருநங்கை கல்கி இதுகுறித்து கூறுகையில்,

என் வாழ்வில் மிகவும் விளையாட்டுத்தனமாக கடந்த மார்ச் மாதம் ஓவியத்தில் தனது பயணத்தை தொடங்கினேன். பின்னர்  மிகவும் தீவிரமாக இதில் நேரம் செலுத்தி ஓவியங்களை வரைய தொடங்கினேன். தற்போது இந்தியா முழுவதும் சில கண்காட்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் விற்பனை ஆகும் ஓவியங்களுக்கான தொகையில் ஒரு பகுதியினை திருநங்கைகளின் கல்விக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். தற்போது 2 லட்சம் ரூபாய் வரை திரட்டி திருநங்கையரின் கல்விக்கு உதவப்பட்டுள்ளது.



திருநங்கைகள் தமது பெற்றோர், சமூகத்தினரால் கைவிடப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவது வேதனையளிக்கிறது. ஒவ்வொரு திருநங்கைக்கும் ஒரு கண்ணியமான வேலை கிடைக்கப்பெற வேண்டும். அவர்களுக்கும் கல்வி, திருமணம் போன்ற பல்வேறு கனவுகள் உள்ளது. ஆனால் அதனை அடையமுடியாமல் தவித்து வருகின்றனர்.



இந்த ஓவியக் கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் எனது ஓவியங்களுக்கான தொகையில் 60 சதவிகிதம் ஆதரவற்ற திருநங்கைக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். இச்சமூகத்தினரால் ஒதுக்கப்பட்டு வரும் திருநங்கைகளின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவுவது இந்த கல்வி மட்டுமே தான்'' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...