கோவை மாநகராட்சியின் சார்பில் ''உலக கழிப்பறை தினம்'' விழிப்புணர்வு பேரணி

கோவை மாநகராட்சியின் சார்பில் 28-வது வார்டுக்குட்பட்ட சரவணம்பட்டி, போயர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ''உலக கழிப்பறை தினம்'' விழிப்புணர்வு பேரணி கடைபிடிக்கப்பட்டது.



மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் கலைக்குழுவினர் தாளம் அடித்துக்கொண்டே திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்ப்போம், சுகாதாரமான வீட்டுக் கழிப்பறையை உருவாக்குவோம் என்றவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''சுகாதாரமான மாநகராட்சியை உருவாக்கும் விதத்தில் ''ஸ்வச் பாரத் மிஷன்'' சார்பில் திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இதனை முற்றிலும் ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்தான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்திடும் வகையிலேயே உலக கழிப்பறை தினம் தற்போது கடைபிடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...