சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி கல்லூரியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளிடம் பறவைகள் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி இந்த வருடம் ஜி.டி.நாயுடு பள்ளியில் மாவட்ட அளவிலான பறவைகள் குறித்த ஓவியப் போட்டி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை, கவிதை போட்டி, வண்ணம் தீட்டுதல், பறவைகளின் புகைப்படம் கொண்டு பெயர் கூறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பிரமோட் மேற்பார்வையில் ''இயற்கை'' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பள்ளிக் குழந்தைகளிடம் பறவைகள் குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகள் அடுத்தகட்டமாக மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி இந்த வருடம் ஜி.டி.நாயுடு பள்ளியில் மாவட்ட அளவிலான பறவைகள் குறித்த ஓவியப் போட்டி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை, கவிதை போட்டி, வண்ணம் தீட்டுதல், பறவைகளின் புகைப்படம் கொண்டு பெயர் கூறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பிரமோட் மேற்பார்வையில் ''இயற்கை'' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பள்ளிக் குழந்தைகளிடம் பறவைகள் குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகள் அடுத்தகட்டமாக மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

