'மல்லையாவுக்கு மட்டுமா; எனக்கு தள்ளுபடி இல்லையா!'

மும்பை: 'விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கடனை தள்ளுபடி செய்தது போல, நான் வாங்கிய, 1.5 லட்சம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, துப்புரவு தொழிலாளி ஒருவர், எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் வங்கிக்கு கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மல்லையாவுக்கு தள்ளுபடி:

தொழில் அதிபர் விஜய் மல்லையாவின், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் வாங்கிய, 1,200 கோடி ரூபாய் உட்பட, 62 பெரும் பணக்காரர்கள் வாங்கிய, 7,016 கோடி ரூபாய் கடனை, எஸ்.பி.ஐ., தள்ளுபடி செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம் திரியம்பகேஷ்வர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளியான, பாபுராவ் சோனாவானே, உள்ளூர், எஸ்.பி.ஐ., கிளைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

எனக்கும் தள்ளுபடி செய்யுங்கள்:

அதில், கூறியுள்ளதாவது: விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்துள்ளீர்கள்; சிறந்த முடிவு; அது போலவே என் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். என் மகனின் சிகிச்சைக்காக, தங்கள் வங்கியில், 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன்; அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை. எனவே, நான் வங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார். ஆனால், இந்த கடிதத்திற்கு, சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் பதில் ஏதும் அளிக்கவில்லை.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...