பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி 43 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர். இந்தியாவை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தானும், பாகிஸ்தானை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையிலும் அத்துமீறியதாக கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகின்றது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தை ஒட்டிய அரபிக்கடற்பகுதியில் நேற்று இந்திய மீனவர்கள் சிலர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்தனர்.
அதில் இருந்த 43 மீனவர்களை கைது செய்து கராச்சிக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அவர்கள் மீது மீனவர்கள் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் துறைமுகம் பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.
அதில் இருந்த 43 மீனவர்களை கைது செய்து கராச்சிக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அவர்கள் மீது மீனவர்கள் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் துறைமுகம் பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.