மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கோவையில் ஏ.டி.எம் இயந்திரம் முன்பாக மலர் வளையம் வைத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!


மத்திய அரசு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் தடை செய்தது காரணமாக பொதுமக்களும் வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி இருப்பதாக கூறி மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கோவையில் ஏ.டி.எம் இயந்திரம் முன்பாக மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்   90 பேர் கைது செய்யப்பட்டனர்.



மத்திய அரசு கடந்த 8ம் தேதி 500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகளை முடக்கியதால் பொது மக்களும், தொழில் முனைவோரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எஸ்.பி.ஐ வங்கி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் ஓன்று கூடிய காங்கிரஸ் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஓன்று கூடினர். அங்கிருந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள் ஊர்வலமாக சென்று எஸ்.பி.ஐ வங்கியை நோக்கி செல்ல முயன்றனர். போலிசார் அனுமதி மறுக்கவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையத்திற்கு மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கருப்பு பணத்தை ஓழிக்க மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்க தக்கது என்றாலும் சரியான திட்டமிடல் இல்லாததால் பொது மக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். தற்போது நிலவும் பண தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து எஸ்.பி.ஐ தலைமை அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 90 பேரை  காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...