மருதமலை முருகன் கோவிலின் மண்டபத்தில் சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவரின் உருவப் படத்தினை வைக்க வேண்டும் எனக் கோரி இந்து மக்கள் கட்சியின் கோவை மாவட்ட நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜூன் சம்பத், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
''பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், புகழ் பெற்ற முருக பக்தருமான சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவர் கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். அவர், மருதமலை கோவிலுக்கு சரியான பாதை இல்லாத காலத்தில் மலைப்பாதையில் படிக்கட்டுக்களை அமைத்து மருதமலை முருகன் பக்தர்கள் எளிதாக தரிசிக்கும் வகையில் மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்தவர்.
மேலும், மலைப்பாதையில் பல்வேறு பணிகள் செய்து மக்கள் இளைப்பாறும் வகையில் இளைப்பாறும் மண்டபங்களை சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவர் அமைத்தார்.
இந்த நற்பணிகள் காரணமாக இளைப்பாறும் மண்டபங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவரின் படமும், பெயரும் பொறிக்கப்பட்டிருந்தன.
ஆனால், தற்போது மருதமலை கோவிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் மராமத்துப் பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருவதால் எம்.ஏ.சின்னப்ப தேவரின் பெயரும், படமும் மறைக்கப்பட்டு வருகிறது.
எனவே, மருதமலை ஆலயம் மற்றும் மலைப்பாதையில் அவரது பெயர் மற்றும் உருவப்படங்களை மீண்டும் பொறிக்கப்பட வேண்டும்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
''பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், புகழ் பெற்ற முருக பக்தருமான சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவர் கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். அவர், மருதமலை கோவிலுக்கு சரியான பாதை இல்லாத காலத்தில் மலைப்பாதையில் படிக்கட்டுக்களை அமைத்து மருதமலை முருகன் பக்தர்கள் எளிதாக தரிசிக்கும் வகையில் மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்தவர்.
மேலும், மலைப்பாதையில் பல்வேறு பணிகள் செய்து மக்கள் இளைப்பாறும் வகையில் இளைப்பாறும் மண்டபங்களை சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவர் அமைத்தார்.
இந்த நற்பணிகள் காரணமாக இளைப்பாறும் மண்டபங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவரின் படமும், பெயரும் பொறிக்கப்பட்டிருந்தன.
ஆனால், தற்போது மருதமலை கோவிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் மராமத்துப் பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருவதால் எம்.ஏ.சின்னப்ப தேவரின் பெயரும், படமும் மறைக்கப்பட்டு வருகிறது.
எனவே, மருதமலை ஆலயம் மற்றும் மலைப்பாதையில் அவரது பெயர் மற்றும் உருவப்படங்களை மீண்டும் பொறிக்கப்பட வேண்டும்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.