மருதமலை கோவிலில் எம்.ஏ.சின்னப்பதேவர் உருவப் படத்தை பொறிக்க இந்து மக்கள் கட்சி மனு

மருதமலை முருகன் கோவிலின் மண்டபத்தில் சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவரின் உருவப் படத்தினை வைக்க வேண்டும் எனக் கோரி இந்து மக்கள் கட்சியின் கோவை மாவட்ட நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜூன் சம்பத், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

''பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், புகழ் பெற்ற முருக பக்தருமான சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவர் கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். அவர், மருதமலை கோவிலுக்கு சரியான பாதை இல்லாத காலத்தில் மலைப்பாதையில் படிக்கட்டுக்களை அமைத்து மருதமலை முருகன் பக்தர்கள் எளிதாக தரிசிக்கும் வகையில் மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்தவர்.

மேலும், மலைப்பாதையில் பல்வேறு பணிகள் செய்து மக்கள் இளைப்பாறும் வகையில் இளைப்பாறும் மண்டபங்களை சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவர் அமைத்தார்.

இந்த நற்பணிகள் காரணமாக இளைப்பாறும் மண்டபங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவரின் படமும், பெயரும் பொறிக்கப்பட்டிருந்தன.

ஆனால், தற்போது மருதமலை கோவிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் மராமத்துப் பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருவதால் எம்.ஏ.சின்னப்ப தேவரின் பெயரும், படமும் மறைக்கப்பட்டு வருகிறது.

எனவே, மருதமலை ஆலயம் மற்றும் மலைப்பாதையில் அவரது பெயர் மற்றும் உருவப்படங்களை மீண்டும் பொறிக்கப்பட வேண்டும்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...