அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தில் முழு ஊதியம் வரும்படி மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு

பண நோட்டுக்களை மாற்றும் விவகாரம் முடிவுக்கு வரும் வரை ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும், ஏடிஎம் இயந்திரத்தில் முழு ஊதியம் வரும்படி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கருப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையாக தற்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், குறிப்பிட்ட காலத்தில் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், 2000 ரூபாய் நோட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

ஆனால், நாளொன்றிற்கு 2000 ரூபாய் மட்டுமே ஏடிஎம்களில் எடுக்க முடியும் என்பதால் அரசு ஊழியர்கள் தங்களது பணிகளை விட்டுவிட்டு, விடுப்பு எடுத்து பணத்திற்காக ஏடிஎம் மையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த பிரச்சனைகளால் ஒட்டுமொத்தமாக அரசு இயந்திரமே ஸ்தம்பிக்கும் நிலை உள்ளதால் சிறப்பு சலுகையாக இம்மாத ஊதியத்தை மாவட்ட கருவூலங்களில் அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்றுக்கொள்ளவும், ஏடிஎம் இயந்திரத்தில் முழு ஊதியம் வரும்படி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், வங்கி ஊழியர்கள் தங்களது பணத்தை தாங்கள் பணியாற்றும் வங்கிகளிலேயே மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...