கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் "சர்வதேச குறைமாத குழந்தைகள்" தினம் மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது.
இவ்விழாவிற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் குறைபிரசவத்தில் பிறந்து தற்போது நலமுடன் இருக்கும் பல குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். மதுரை, திருச்சி, ஈரோடு போன்ற மாவட்டங்களிருந்தும் பலர் விழாவிற்காக வந்திருந்தனர்.
இவ்விழாவிற்கு மருத்துவக் குழு தலைவரான டாக்டர். சுகுமாரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், 25 வருடங்களுக்கு முன்னர் இம்மருத்துவமனையில் தொடங்கப்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கான பிரிவு தற்போது 40 இளங்குழந்தைகளை அனுமதிக்கும் வசதியுடன், உயர் அழுத்த செயற்கை சுவாச கருவிகள், சிபாப், போக்குவரத்து இன்குபேட்டர், 2 தேர்ச்சிபெற்ற சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என வளர்ந்திருப்பது குறித்து சிறப்புரையாற்றினார்.
.jpg)
பச்சிளங்குழந்தை பிரிவின் தலைவரான டாக்டர். சித்தார்த்த புத்தவரப்பு "மருத்துவ அறிவியலின் வளர்ச்சியால் இன்று 24- 25 வார சிசுக்களையும் காப்பாற்றுவது சாத்தியமாகியுள்ளது" என்று கூறினார். சரியான முறையில் செயற்கை சுவாசம் அளித்தல், நோய் தொற்று கட்டுபாடு மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஏதுவான நெறிமுறைகளின் மூலமும் இக்குழந்தைகளை மூளை அழற்சி, உடல் செயல்பாட்டு குறைகளின்றியும் காப்பற்றலாம். இக்குழந்தைகளின் பராமரிப்பு மருத்துவமனையை விட்டு சென்ற பிறகும் முதல் சில ஆண்டுகளுக்கு தனி கவனத்துடன் இருக்க வேன்டும். மக்களிடமும், மருத்துவர்களிடமும் விழிப்புணர்வை அதிகரிக்கவே இந்நிகழ்ச்சி" என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், 1000 கிராம் குழந்தையாக இம்மருத்துவமனையில் பிறந்து இன்று வெற்றிகரமாக மருத்துவ படிப்பினை முடித்துள்ள மாணவி, 24 வாரதில் பிறந்து இன்று ஆரோக்கியதுடம் இருக்கும் இரட்டையரின் பெற்றோர் என பலரும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவிற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் குறைபிரசவத்தில் பிறந்து தற்போது நலமுடன் இருக்கும் பல குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். மதுரை, திருச்சி, ஈரோடு போன்ற மாவட்டங்களிருந்தும் பலர் விழாவிற்காக வந்திருந்தனர்.
இவ்விழாவிற்கு மருத்துவக் குழு தலைவரான டாக்டர். சுகுமாரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், 25 வருடங்களுக்கு முன்னர் இம்மருத்துவமனையில் தொடங்கப்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கான பிரிவு தற்போது 40 இளங்குழந்தைகளை அனுமதிக்கும் வசதியுடன், உயர் அழுத்த செயற்கை சுவாச கருவிகள், சிபாப், போக்குவரத்து இன்குபேட்டர், 2 தேர்ச்சிபெற்ற சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என வளர்ந்திருப்பது குறித்து சிறப்புரையாற்றினார்.
.jpg)
பச்சிளங்குழந்தை பிரிவின் தலைவரான டாக்டர். சித்தார்த்த புத்தவரப்பு "மருத்துவ அறிவியலின் வளர்ச்சியால் இன்று 24- 25 வார சிசுக்களையும் காப்பாற்றுவது சாத்தியமாகியுள்ளது" என்று கூறினார். சரியான முறையில் செயற்கை சுவாசம் அளித்தல், நோய் தொற்று கட்டுபாடு மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஏதுவான நெறிமுறைகளின் மூலமும் இக்குழந்தைகளை மூளை அழற்சி, உடல் செயல்பாட்டு குறைகளின்றியும் காப்பற்றலாம். இக்குழந்தைகளின் பராமரிப்பு மருத்துவமனையை விட்டு சென்ற பிறகும் முதல் சில ஆண்டுகளுக்கு தனி கவனத்துடன் இருக்க வேன்டும். மக்களிடமும், மருத்துவர்களிடமும் விழிப்புணர்வை அதிகரிக்கவே இந்நிகழ்ச்சி" என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், 1000 கிராம் குழந்தையாக இம்மருத்துவமனையில் பிறந்து இன்று வெற்றிகரமாக மருத்துவ படிப்பினை முடித்துள்ள மாணவி, 24 வாரதில் பிறந்து இன்று ஆரோக்கியதுடம் இருக்கும் இரட்டையரின் பெற்றோர் என பலரும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.