10-ஆம் வகுப்பு மாணவர் மாயம்


கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ஹரிபிரசாத் (15). பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்படும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், திங்களன்று காலை மணிகண்டன், நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஹரிபிரசாத்தை பள்ளி செல்வதற்காக விட்டுவிட்டு திரும்பிச் சென்றுள்ளார்.

பின், சுமார் 10 மணியளவில் பள்ளியில் இருந்து மணிகண்டனை அழைத்து ஹரிபிரசாத் இன்று விடுமுறை எடுத்துள்ளார் என தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மணிகண்டன் பல்வேறு இடங்களில் ஹரிபிரசாத்தை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...