டாஸ்மாக் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் வசூலாகும் சில்லறை
நோட்டுகளை கமிசன் அடிப்படையில் மாற்றிவரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் வருமான வரித்துறை
அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கோவையில் அரசு போக்குவரத்துத் துறை மற்றும் டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை தனியார் முதலாளிகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து கமிசன் அடிப்படையில் மாற்றிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியினர் ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் புலனாய்வுப் பிரிவு துணை ஆணையர் செந்தில் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், முறைகேடாக பணத்தை மாற்றி வரும் போக்குவரத்துத் துறை மற்றும் டாஸ்மாக் கடை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் அரசு போக்குவரத்துத் துறை மற்றும் டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை தனியார் முதலாளிகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து கமிசன் அடிப்படையில் மாற்றிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியினர் ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் புலனாய்வுப் பிரிவு துணை ஆணையர் செந்தில் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், முறைகேடாக பணத்தை மாற்றி வரும் போக்குவரத்துத் துறை மற்றும் டாஸ்மாக் கடை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.