சொத்து வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்புகளை துண்டித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் 3 மண்டலங்களில் உள்ள வரிதாரர்கள் சொத்து வரி செலுத்தாததால் 4 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 57-ல் மசக்காளிபாளையம், ஜி.வி.ரெசிடென்ஸியில் வசிக்கும் வரிதாரர்கள் சுபாஷ் சந்திர திவாரி மற்றும் திருவா சந்திர திவாரி ஆகியோர் சொத்து வரி ரூ.11 ஆயிரத்து 922 ரூபாய் மற்றும் 4 ஆயிரத்து 664 ரூபாய் செலுத்தாததால் வரிதாரரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

இதேப்போல், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 97-ல் குறிச்சி, அன்னை இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் சுமிதா என்பவர் சொத்து வரி ரூ.16 ஆயிரத்து 108 மற்றும் ரூ.19 ஆயிரத்து 308 செலுத்தாததால் வரிதாரரின் குடிநீர் இணைப்பும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 44-ல் சபரி கார்டன் பகுதியில் வசிக்கும் வி.சீதாலட்சமி என்பவர் சொத்து வரி ரூ.6 ஆயிரத்து 696 மற்றும் வார்டு 39-ல் ஆவாரம்பாளையம் பகுதியில் வசிக்கும் சாந்தா என்பவர் சொத்து வரி ரூ.76 ஆயிரத்து 360 செலுத்தாததால்  2 குடிநீர் இணைப்புகள் என ஆகமொத்தம் 4 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...