கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரியாக திங்களன்று ஒரே நாளில் ரூ.2.61 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ரூ.50.28 லட்சமும், மேற்கு மண்டலத்தில் ரூ.35.65 லட்சமும், தெற்கு மண்டலத்தில் ரூ.24.36 லட்சமும், வடக்கு மண்டலத்தில் ரூ.49.48 லட்சமும், மத்திய மண்டலத்தில் ரூ.1.01 கோடியும் என ஆகமொத்தம் திங்களன்று ரூ.2.61 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து மாநகராட்சி வரியாக கடந்த நவம்பர் 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை மொத்தம் ரூ.39.53 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது'' என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ரூ.50.28 லட்சமும், மேற்கு மண்டலத்தில் ரூ.35.65 லட்சமும், தெற்கு மண்டலத்தில் ரூ.24.36 லட்சமும், வடக்கு மண்டலத்தில் ரூ.49.48 லட்சமும், மத்திய மண்டலத்தில் ரூ.1.01 கோடியும் என ஆகமொத்தம் திங்களன்று ரூ.2.61 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து மாநகராட்சி வரியாக கடந்த நவம்பர் 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை மொத்தம் ரூ.39.53 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது'' என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.