கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 59-வது வார்டு ஆர்.கே.கே. நகர் பகுதியில் பாலித்தீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது, 50 மைக்கரான் குறைவாக உள்ள பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து, ஒரு கடையின் உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை உபயோகிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் அபேட் மருந்தினை நீர் தொட்டிகளில் ஊற்றுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையருடன் துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது, 50 மைக்கரான் குறைவாக உள்ள பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து, ஒரு கடையின் உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை உபயோகிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் அபேட் மருந்தினை நீர் தொட்டிகளில் ஊற்றுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையருடன் துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
