கடந்த 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை செவ்வாயன்று (இன்று) காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் 3 தொகுதிகளிலுமே ஆரம்பம் முதல் அதிமுக முன்னிலை வகித்து இறுதியில் வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து, மாவட்டங்கள் முழுவதும் அதிமுக-வினர் உற்சாகமாக வெற்றியினை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், அதிமுக சட்டன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், துணை மேயர் லீலாவதி உன்னி மற்றும் அதிமுக தொண்டர்கள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.


இதனைத்தொடர்ந்து, மாவட்டங்கள் முழுவதும் அதிமுக-வினர் உற்சாகமாக வெற்றியினை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், அதிமுக சட்டன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், துணை மேயர் லீலாவதி உன்னி மற்றும் அதிமுக தொண்டர்கள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
