கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (46). இவர் கோவை தெற்கு கோட்டாச்சியர் மதுராந்தகியின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை கிருஷ்ண மூர்த்தியும் அவரது மனைவி கவுரி-யும் இருசக்கர் வாகனத்தில் ஆத்துப்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் கணவன் மனைவி இருவரும் தூக்கியெறியப்பட்டனர்.
இந்த விபத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அருகில் இருந்த பொதுமக்கள் கணவன் மனைவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கிருஷ்ண மூர்த்தி உயிரிழந்தார். கவுரி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த கிருஷ்ண மூர்த்தி மேட்டுப்பாளையம் நகராட்சியில் தாசில்தாராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.