சாலை விபத்தில் முன்னாள் தாசில்தார் பலி!


கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (46). இவர் கோவை தெற்கு கோட்டாச்சியர் மதுராந்தகியின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை கிருஷ்ண மூர்த்தியும் அவரது மனைவி கவுரி-யும் இருசக்கர் வாகனத்தில் ஆத்துப்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் கணவன் மனைவி இருவரும் தூக்கியெறியப்பட்டனர். 

இந்த  விபத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அருகில் இருந்த பொதுமக்கள் கணவன் மனைவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கிருஷ்ண மூர்த்தி உயிரிழந்தார். கவுரி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

உயிரிழந்த கிருஷ்ண மூர்த்தி மேட்டுப்பாளையம் நகராட்சியில் தாசில்தாராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...