பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி டிச. 6ம் தேதி கோவை விமான நிலைய முற்றுகை போராட்டம் அறிவிப்பு

பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி டிச. 6ம் தேதியன்று கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு அறிவித்துள்ளது.



இதுகுறித்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

''450 ஆண்டுகாலம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த பாபர் மஸ்ஜிதை 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று நீதிமன்ற உத்தரவுகளை மீறி சங்கபரிவார கும்பல் இடித்து தகர்த்தது. இடிக்கப்பட்டு 24 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.

ஆவணங்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியது. இது மிகப்பெரும் அநீதி ஆகும்.

இதனை கருத்தில் கொண்டு பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் டிசம்பர் 6ம் தேதியன்று காலை 10 மணியளவில் கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...