பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி டிச. 6ம் தேதியன்று கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
''450 ஆண்டுகாலம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த பாபர் மஸ்ஜிதை 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று நீதிமன்ற உத்தரவுகளை மீறி சங்கபரிவார கும்பல் இடித்து தகர்த்தது. இடிக்கப்பட்டு 24 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.
ஆவணங்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியது. இது மிகப்பெரும் அநீதி ஆகும்.
இதனை கருத்தில் கொண்டு பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் டிசம்பர் 6ம் தேதியன்று காலை 10 மணியளவில் கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
''450 ஆண்டுகாலம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த பாபர் மஸ்ஜிதை 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று நீதிமன்ற உத்தரவுகளை மீறி சங்கபரிவார கும்பல் இடித்து தகர்த்தது. இடிக்கப்பட்டு 24 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.
ஆவணங்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியது. இது மிகப்பெரும் அநீதி ஆகும்.
இதனை கருத்தில் கொண்டு பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் டிசம்பர் 6ம் தேதியன்று காலை 10 மணியளவில் கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.