சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகளை உருவாக்க ஸ்வச் பெண்கள் அமைப்பினர் பயிற்சி

பாலித்தீன் பைகளினால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேட்டை குறைத்திடும் வகையில் பாலித்தின் பைகளை தவிர்த்து பழைய துணிகளினால் பைகளை உருவாக்கும் பயிற்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 



கோவை புரூக் ஃபீல்டு வனிகவளாகத்தில் ஸ்வச் பெண்கள் அமைப்பின் சார்பில் செவ்வாயன்று (இன்று) அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சுஜனி மற்றும் சங்கீதா, புரூக் ஃபீல்டு மார்க்கெட்டிங் மேலாலர் சுஜாதா ஆகியோர் இப்பயிற்சியை சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு பயிற்றுவித்தனர்.



இதுகுறித்து, ஸ்வச் பெண்கள் அமைப்பின் உறுப்பினர் சுஜனி நமது நிருபரிடம் கூறுகையில்:

பாலித்தீன் பைகளின் பயன்பாட்டைத் தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத துணிப் பைகளை பயன்படுத்தவே இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம், பழைய துப்பட்டா, புடவை கொண்டு ஒரு வகை பையும், பருத்தி ஆடைகள் கொண்டு ஒரு வகை பையும் தயாரிக்க பயிற்சி வழங்கப்படுகிறது.



இது மிகவும் எழிமையான தயாரிப்பு மற்றும் நன்மை தரக்கூடியது ஆகும். துணிகளால் ஆன பைகளை வாங்க மக்கள் சுனக்கம் காட்டி வரும் நிலையில் பழைய துணிகளினாலே பைகளை தயாரிப்பது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோவையை நேசிக்கும் மக்கள் கண்டிப்பாக கோவையை சுகாதாரமிக்க மாநகரமாக வைக்க உதவ வேண்டும்.

இந்த பயிற்சி 15 நாட்களுக்கு ஒரு முறை என மாதம் 2 முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பங்குபெருவோர் தங்களது வீட்டின் அருகில் வசிப்பவர்களிடமும் இதுகுறித்தான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கோவை விரைவில் பிளாஸ்டிக் இல்லா மாநகரமாக மாற அனைவரும் சேர்ந்து உழைப்போம்'' என்றார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...