போலீஸ் ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ் . கருவிகள் பொருத்தும் பணி தீவிரம் கமிஷனர் அமல்ராஜ் தகவல் !

கோவை மாநகர போலீசார் ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கோவை மாநகரில் 23 போலீஸ் ரோந்து ஜீப்புகளும்  32 ரோந்து மோட்டார் சைக்கிள்களும் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களும் உள்ளன. இதுவரை 9 போலீஸ் ரோந்து வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் 100 ரோந்து வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.கருவிகள் பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதன் மூலம் போலீசார் சரியாக ரோந்து பணியை மேற்கொள்கின்றனரா என்பதை கண்டறிய முடியும்.மேலும், குற்றச்சம்பங்கள் நடக்கும் இடத்தில் உள்ள போலீஸ் வாகனத்தை சரியாக தெரிந்து கொண்டு, அங்கு விரைந்து போலீஸ்படைகளை அனுப்ப முடியும்.

போக்குவரத்து சிக்னல்களில் உள்ள கமிராக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு உடனடி  தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...