கோவை மாநகர போலீசார் ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தும் பணி
தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கோவை மாநகரில் 23 போலீஸ் ரோந்து ஜீப்புகளும் 32 ரோந்து மோட்டார் சைக்கிள்களும் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களும் உள்ளன. இதுவரை 9 போலீஸ் ரோந்து வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் 100 ரோந்து வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.கருவிகள் பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதன் மூலம் போலீசார் சரியாக ரோந்து பணியை மேற்கொள்கின்றனரா என்பதை கண்டறிய முடியும்.மேலும், குற்றச்சம்பங்கள் நடக்கும் இடத்தில் உள்ள போலீஸ் வாகனத்தை சரியாக தெரிந்து கொண்டு, அங்கு விரைந்து போலீஸ்படைகளை அனுப்ப முடியும்.
போக்குவரத்து சிக்னல்களில் உள்ள கமிராக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு உடனடி தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கோவை மாநகரில் 23 போலீஸ் ரோந்து ஜீப்புகளும் 32 ரோந்து மோட்டார் சைக்கிள்களும் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களும் உள்ளன. இதுவரை 9 போலீஸ் ரோந்து வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் 100 ரோந்து வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.கருவிகள் பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதன் மூலம் போலீசார் சரியாக ரோந்து பணியை மேற்கொள்கின்றனரா என்பதை கண்டறிய முடியும்.மேலும், குற்றச்சம்பங்கள் நடக்கும் இடத்தில் உள்ள போலீஸ் வாகனத்தை சரியாக தெரிந்து கொண்டு, அங்கு விரைந்து போலீஸ்படைகளை அனுப்ப முடியும்.
போக்குவரத்து சிக்னல்களில் உள்ள கமிராக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு உடனடி தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.