கோவையில் விற்பனையாகும் போலி செல்போன்கள்: உஷார்...!


மூன்றாவது கை என்று கூறும் அளவிற்கு செல்போன்கள் மனிதர் வாழ இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. ஆரம்ப காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்காக பயன்பட்டு வந்த செல்போன்கள் தற்போது ஆண்ராய்ட்டு உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை கொண்டு பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவம் முதல் கேளிக்கை வரை  அனைத்து வசதிகளையும் பெற உதவும் ஒரு பொருளாக மாறிவிட்டது. 

 

பல்வேறு நிறுவனங்களின் செல்போன்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விலை அதிகமான செல்போன்களின் மாதிரிகளைக் கொண்டு அச்சு அசலாய் போலி செல்போன்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை தற்போது கோவை சந்தைகளை மையமாக வைத்து செயல்பட்டு வருகின்றது. 

 

கடைகளில் போலி செல்போன்கள் விற்பனை நடப்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுவிட்டதால் தற்சமயம் அவற்றை விற்க புதிய யுக்திகளை அதன் தயாரிப்பாளர்கள் கையாண்டு வருகின்றனர். 

 

போலி ரசீது : 

 

போலி செல்போன்களை விற்பனை செய்ய வடமாநில தொழிலாளர்கள் சிலரை விற்பனையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அவர்களிடம் செல்போன் விற்றதற்காக போலியான ரசீது ஒன்று தரப்படுகிறது. சுமார் 2 மாதத்திற்கு முன்பாக வாங்கப்பட்டது போல் அந்த ரசீதில் குறிப்பிடப்படுகிறது. மேலும்,அவற்றை விற்பனை செய்பவர்கள், வடமாநிலத்தில் உள்ள பிரபல கடை ஒன்றில் இந்த செல்போனை வாங்கியதாக தெரிவிக்கின்றனர். பார்ப்பதற்கு, பரம ஏழை போன்று தோற்றமளிக்கும் இவர்கள், அந்த போலி செல்போன்களை தங்களுடையது என்றும், பணப்பற்றாக்குறையால் தற்சமயம் விற்பதாகவும் கூறுகின்றனர்.

 

 

கோவையின் முக்கிய இடங்களில் நடமாடும் இந்த கும்பல் கொடுக்கும் செல்போன்களை குறித்து தெரியாமல் அவற்றை தரமான செல்போன்கள் என்று நினைத்து பலர் ஏமாந்து போகின்றனர். தொடர்ந்து ஆயிரம் ரூபாய் கூட மதிப்பில்லாத அந்த போலி செல்போன்களை ரூ.2 முதல் 3 ஆயிரம் வரை கொடுத்து வாங்கி செல்கின்றனர். குறைந்த விலையில் நல்ல செல்போன் வாங்கிவிட்டதாக மார் தட்டிக்கொள்ளும் நம் ஊர் மக்கள் அது போலி என்று தெரிந்த பின்னர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதும் தொடர் கதையாகி வருகிறது.

 

 

 

கண்டுபிடிப்பது எப்படி?

 

போலி செல்போன்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து செல்போன் விற்பனையாளர் பிரசன்னா கூறியதாவது:-

 

தற்போது சந்தைகளில் விற்பனையாகிவரும் போலி செல்போன்களை பொதுமக்கள் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். அந்த அளவிற்கு உணமையானவை போன்றே தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

· ஒரு செல்போன் வாங்கும் முன் அதன் தொடுதிரையை நாம் நன்றாக கவனிக்க வேண்டும். தரமான செல்போன்களில் தொடுதிரையின் அடர்த்தி மிகவும் குறைவாகவும், லேசாகவும் (எல்.ஈ.டி. திரை) இருக்கும். ஆனால் போலிகளில் இது போன்ற தொடுதிரை இருக்காது.

· நிறுவனத்தின் பெயர்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். தொடுதிரையின் மேற்பகுதியில் அல்லது செல்போனின் பின்புறம் செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இடம் பெற்றிருக்கும். அதில் ஏதேனும் ஒரு எழுத்து மட்டும் குறைவாக இருக்கும். சாதாரணமாக இதனை பெரும்பாலனோர் கவனிப்பதில்லை.

· போலி செல்போனில் அமைக்கப்பட்டிருக்கும் மென்பொருளானது தரமானதாக இருக்காது. சீன செல்போன்களில் உள்ளது போன்ற ஒரு அமைப்பை காண முடியும். அவ்வாறாக இருப்பின் அது நிச்சயமாக போலி செல்போன் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

· போலிகளில் சப்தத்தின் அளவு அதிகமாகவோ அல்லது இயல்புக்கு குறைவாகவோ இருக்கும். மேலும், பாடல்களை ஒலிக்கச்செயும் பொது கரகரப்பான ஒலியை உணரமுடியும்.

இவ்வகையான செல்போன்களை விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை கோவையில் அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் நம்பகமான செல்போன் விற்பனை நிலையங்களில் அவற்றை வாங்குவது சிறந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 குறைந்த விலைக்கு செல்போன்கள் மட்டுமல்ல வேறு எந்த பொருட்கள் கிடைத்தாலும் அது குறித்து விவரம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை பெற்று வாங்குவது மிகச்சிறந்தது. அல்லாமல், அவற்றை வாங்கிய பின்னர் உண்மை நிலை தெரிய வரும்போது நஷ்டமும், மன உளைச்சலும் உங்களுக்குத்தான்.

சொல்லுறத சொல்லிட்டோம், உஷார்..!

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...