செல்லாத நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வுசெய்ய மத்திய குழு கோவை வந்துள்ளது


செல்லாத நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கியதால் ஏற்பட்டவிளைவுகள் குறித்து ஆய்வுசெய்ய, மத்திய குழு தமிழகம் வந்துள்ளது  

இக்குழு, கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை நிர்வாகிகளின் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,



'பழைய ரூபாய் நோட்டுகள்செல்லாது' என நவ., 8 இரவு மத்திய அரசு அறிவித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள்குறித்து கள ஆய்வு செய்வதற்காக நவ., 19ல், பிரதமர் மோடி 27குழுக்களை அமைத்தார். இதில், மூன்று பேர் கொண்ட குழு நேற்று தமிழகம் வந்தது. இதில், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கூடுதல் செயலர், மனிதவள மேம்பாட்டுத் துறை இணைசெயலர் மற்றும் மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை துணை செயலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



இந்நிலையில்  மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய நகர்ப்புறவளர்ச்சிச்துறை துணை செயலர் ஜானகி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து  வங்கிகளின் உயர்அதிகாரிகள் மற்றும் அஞ்சல் துறை உயர் அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள்,விவசாயிகள் ,சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.அப்போது, 100 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள்புழக்கம்; பழைய ரூபாய்நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள்; ஏ.டி.எம்., மையங்களில் புதியநோட்டுகளை வினியோகிக்க செய்யப்படவேண்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர், வங்கிஅதிகாரிகள் மற்றும் அஞ்சல்துறையினருடன் ஆலோசனைநடத்திவிட்டு, டில்லி புறப்படுகின்றனர். 

இக்குழு, வரும் 25ம் தேதி கள ஆய்வுஅறிக்கையை  மத்திய அரசிடம் ஒப்படைக்க  உள்ளதாக தெரிய வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...