மாநகராட்சியுடன் இணைந்து சிஎம்எஸ் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்


இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் கோவை மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் கோவை சிஎம்எஸ் பகுதியில் புதனன்று துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து, இப்பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் நமது நிருபரிடம் கூறுகையில்,



இங்கு சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். கல்லூரி மாணவர்கள் இப்பகுதிக்கு வந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம். மாணவர்களின் இச்செயல் எங்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பணி முடிந்தவுடன் தொடர்ந்து இதேப்போன்று சுத்தமாக வைக்க நாங்கள் பணியாற்றுவோம்'' என்றார்.





தூய்மை பணி காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. இதற்கான அனைத்து உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் கோவை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. மாணவர்களும், தன்னார்வலர்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தவிர்ப்பது குறித்தும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகரமைப்பு திட்ட துணை அலுவலர் ஹேமலதா, மண்டல துப்புரவு அலுவலர் குணசேகரன், ஸ்வச் பாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமால்  ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இப்பணி நடைபெற்றது.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...