விசாரணைக்காக அழைத்துச் சென்ற மகனை காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை தற்கொலைக்கு முயற்சி

காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தன் மகனை காணவில்லை என கோவை வடவள்ளியை சேர்ந்த பூமி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை வடவள்ளி, ராமசாமி தில்லை வீதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பூமி. இவருடைய மகன் சரத் குமார். இவரும் கட்டிடத் தொழில் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சரத் குமாரை வடவள்ளி காவல்துறையினர் விசாரணை என்ற பேரில் அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. காவல் துறையினர் அழைத்துச் சென்று 7 நாட்கள் ஆகியும் மகனை காணவில்லை எனவும், விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர் தன் மகன் எங்கு உள்ளார் என கூற மறுப்பதாகவும் குற்றம்சாட்டி சரத்குமாரின் தந்தை பூமி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புதனன்று (இன்று) உடம்பில் மண்ணென்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். 



இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் பூமியை மீட்டு பந்தய சாலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்தியக் குழுவின் சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் மகனை காணவில்லை எனக்கூறி தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...