காவல்துறை மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் டாக்சி ஓட்டுனர்களுக்கு விபத்து முதலுதவி பயிற்சி


கோவை மாநகரில் வாகன விபத்துக்களை தடுக்கவும், விபத்தில் பலியாவோர் எண்ணிகையை தடுக்கவும் போலீசார்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.அதன்படி, இன்று பீளமேட்டில் உள்ள தனியார் விடுதியில் தனியார் கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு விபத்தில் சிக்கியோருக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சி நடைபெற்றது. 





கோவை மாநகர காவல்துறையினர் மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துணை ஆணையர், சரவணன்,  வாகனம் ஓட்டும்போதும், விபத்து நடக்கும்போதும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஓட்டுனர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து கே.எம்.சி.எச். மருத்துவமனையின் மருத்துவ குழுவினர், மனித உருவ மாதிரிகளை கொண்டு முதலுதவி மேற்கொள்ளும்  வழிமுறைகளை எடுத்துரைத்தனர். 



இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து அதிகாரி (கிழக்கு) அய்யாசாமி, உதவி கமிஷனர் மற்றும் 100க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி தங்களுக்கு உதவிகரமாக இருந்ததாகவும், இதன் மூலம் விபத்து ஏற்படும் போது உயிர்களை காப்பாற்றுவோம் என்றும் ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...