பரம்பிக்குளம் வாய்க்காலில் தண்ணீர் திருட அமைக்கப்பட்ட குழாய்கள் அகற்றம்- விவசாயி கைது


திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயத்திற்காக 2-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த 4ம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நெகமம், சுல்தான்பேட்டை வழியாக காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிக்கு செல்கிறது. இதன் மூலம் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

 

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள மூலனூர் பகுதியில் செல்லும் பரப்பிக்குளம் பிரதான வாய்க்கால் பகுதிகளின் ஓரங்களில் பைப் அமைத்து சிலர் தண்ணீர் திருடுவதாக பிஏபி கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுசெய்த போது அங்கு வாய்க்கால் ஓரத்தில் கற்களுக்கு இடையே குழாய் அமைத்து திருட்டுத்தனமாக தண்ணீர் திருடப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உடனடியாக ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு குழாய்களை அகற்ற முயன்றபோது கால்வாய் அருகே முறைகேடாக குழாய் பதித்து  தண்ணீர் திருடிய விவசாயி பழனிச்சாமி அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரி சதீசை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். ஆனாலும், பொதுப்பணித் துறையினர் வாய்க்கால்  பகுதியில் முறைகேடாக பதித்த குழாய்களை முழுவதும் அகற்றினார்கள். 

இதைத்தொடர்ந்து, அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயி பழனிச்சாமி மீது பொதுப்பணித் துறையினர் நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விவசாயி பழனிச்சாமியை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...