கோவை-பெங்களூர் இடையிலான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவக்கப்படும்


கோவை-பெங்களூர் இடையிலான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவக்கப்படும் என சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வெர்மா தெரிவித்துள்ளார்.



கோவை இரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வெர்மா கூறியதாவது:- 

கோவை ரயில் நிலையத்தில் இட நெருக்கடியை தவிர்க்க பல அடுக்கு நான்கு மற்றும் இரு சக்கர வாகன நிறுத்த வசதிகள் 2 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிகள் மூன்று அல்லது நான்கு மாதத்தில் துவக்கப்படும். கோவை- பெங்களூர் இடையிலான இரவு நேர இரயில் சேவை குறித்து இரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும்.

மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்த கோவை- பெங்களூர் இடையேயான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவங்க திட்டப்பட்டுள்ளது. மேலும், போத்தனூர்- பொள்ளாச்சி அகல இரயில் பாதை திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பிரச்சனையில் தென்னக இரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, 10 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது. கோவை இரயில் நிலையத்தில் குறுக்கலாக உள்ள முதலாவது நடைமேடை அகலப்படுத்தப்படும். சுரங்க நடைபாதை, லிப்ட், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட பயணிகளுக்கான வசதிகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்'' என ஹரி சங்கர் வெர்மா தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...