வால்பாறை வனத்தில் காட்டெருமை விரட்டியதால் வனக்காப்பாளர் உயிரிழந்தார்


வால்பாறை வனச்சரகம் அக்காமலை புல்லுமேடு பகுதியில் செவ்வாயன்று காட்டெருமை விரட்டியதால் நெஞ்சுவலி ஏற்பட்ட வனக்காப்பாளர் சங்கிலிப்பாண்டி என்ற கணபதி (57) உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வால்பாறை வனக்காப்பாளர் திருமலைசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் கூறியுள்ளதாவது :- 

அக்காமலை பகுதியில் எனது தலைமையில் தர்மராஜ், சங்கிலிப்பாண்டி ஆகியோர் கோனலாறு வேட்டைத் தடுப்பு முகாமிற்கு நேற்று காலை சென்றோம் . ரோந்து பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக காட்டெருமை விரட்டியது. இதில் மூன்று பேரும் சிதறி ஓடினோம். 

பிறகு சங்கிலிபாண்டியை காணவில்லை. அவரை தேடி மீட்டபோது நெஞ்சு வலிப்பதாக கூறினார். நாங்கள் அவரை உடனே வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தோம். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்'' என கூறியுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து வால்பாறையில் உள்ள மானாம்பள்ளி வனச்சரக அலுவலகத்தில் குவிந்த வேட்டை தடுப்பு காவலர்கள் பணியின் போது உயிரிழந்த வேட்டை தடுப்பு காவலருக்கு ரூ.5 லட்சம் வழங்க வலியுறுத்தி வால்பாறை வனச்சரகர் சக்திவேலை நேற்று முற்றுகையிட்டனர். இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

ஆனால், வனக்காவலர்கள் வனச்சரகர் மற்றும் வனவர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு, இறந்தவருக்கு வனத்துறை இழப்பீடு வழங்கினால் மட்டுமே நாங்கள் உடலை எடுத்துச் செல்வோம் என வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டனர். 

இதைத்தொடர்ந்து புதனன்று (இன்று) வால்பாறை, மாணாம்பள்ளி, டாப்சிலிப் சரகத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுப்பதாக ஒப்புக்கொண்டு முதல் தவணையாக ரூ.25 ஆயிரம் கொடுத்தனர். அதன் பிறகு உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின் சங்கிலிபாண்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...