சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு நாடகம்


கோவை: புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இன்று மாலை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ரூட்ஸ் நிறுவனம் மற்றும் கோவை மாநகர போக்குவரத்து சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. கோவை மாநகர துணை ஆணையர் சரவணன் தலைமை தாங்கினார்.



இந்நாடகம், ரூட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் இணைந்து பயணத்தில் விபத்துக்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை நாடகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விளக்கினர். அதில், பயணம் செய்யும் போது, மது அருந்தி விட்டு பயணம் செய்வது, தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்வது, கைபேசி பேசிக்கொண்டு பயணம் செய்வது, சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது போன்ற பல்வேறு விதமான செயல்களால் சாலை விபத்து ஏற்படுகிறது. என்பதை நாடகத்தின் மூலம் விளக்கினர்.







பின்னர், இது குறித்து கோவை மாநகர துணை ஆணையர் சரவணன் பேசுகையில், இந்நாடகத்தின் மூலம் பொதுமக்கள் சாலை பயணத்தின் போது தங்களது தவறை சரிசெய்து கொள்ளவேண்டும் என்றும் சாலை விதிகளை பின்பற்றியும் விலைமதிப்பில்லா இந்த உயிரை காப்போம் என்றும் கூறினார்.



இதில், ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் கவிஞர் கவிதசன், கோவை மாநகர உதவி ஆணையர் மாகுடபதி, போக்குவரத்து மேற்கு காவல் ஆய்வாளர் சதாசிவம், கிழக்கு காவல் ஆய்வாளர் ஐயர்சாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...