கோவை: புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இன்று மாலை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ரூட்ஸ் நிறுவனம் மற்றும் கோவை மாநகர போக்குவரத்து சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. கோவை மாநகர துணை ஆணையர் சரவணன் தலைமை தாங்கினார்.
.jpg)
இந்நாடகம், ரூட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் இணைந்து பயணத்தில் விபத்துக்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை நாடகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விளக்கினர். அதில், பயணம் செய்யும் போது, மது அருந்தி விட்டு பயணம் செய்வது, தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்வது, கைபேசி பேசிக்கொண்டு பயணம் செய்வது, சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது போன்ற பல்வேறு விதமான செயல்களால் சாலை விபத்து ஏற்படுகிறது. என்பதை நாடகத்தின் மூலம் விளக்கினர்.
.jpg)
.jpg)
.jpg)
பின்னர், இது குறித்து கோவை மாநகர துணை ஆணையர் சரவணன் பேசுகையில், இந்நாடகத்தின் மூலம் பொதுமக்கள் சாலை பயணத்தின் போது தங்களது தவறை சரிசெய்து கொள்ளவேண்டும் என்றும் சாலை விதிகளை பின்பற்றியும் விலைமதிப்பில்லா இந்த உயிரை காப்போம் என்றும் கூறினார்.
.jpg)
இதில், ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் கவிஞர் கவிதசன், கோவை மாநகர உதவி ஆணையர் மாகுடபதி, போக்குவரத்து மேற்கு காவல் ஆய்வாளர் சதாசிவம், கிழக்கு காவல் ஆய்வாளர் ஐயர்சாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.