காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவர் மாயம்


ஈரோடு மாவட்டம் கோபி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கோகுல்(19). இவர் கோவையில் தங்கி வெள்ளகிணறு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே வகுப்பை சேர்ந்த பவதாரணி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இது பெற்றேருக்கு தெரியவர, காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்து இருவரும் தங்கள் பெற்றோருடன் செல்வதாக சம்மதம் தெரிவித்தனர். 

இந்த நிலையில் கோகுல் மீண்டும் கல்லூரிக்கு செல்ல முடிவு செய்தார். கடந்த மாதம் 23ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்ட கோகுல் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை ராமகிருஷ்ணன் அவரை பல இடங்களில் தேடியும் கோகுல் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து ராமகிருஷ்ணன் நேற்று காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார் . தொடர்ந்து வழக்கு பதிந்த போலீசார் மாயமான கல்லூரி மாணவரை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...