தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு மற்றும் சென்னை ஐக்கிய நாடு சிறுவர் நிதியம் இணைந்து குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைக்கான இரண்டுநாள் கருத்தரங்கு நிகழ்ச்சி ஆர்.எஸ். புரம் ஸ்ரீ அன்னபூர்ணா கலையரங்கத்தில் இன்று துவங்கியது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு துணைத் தலைவர்கள் சந்திராதேவி வரவேற்புரை வழங்கினார், நிர்மலா தலைமையுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் பராமரிப்பு, தத்தெடுப்பு போன்றவவை குறித்து கலந்துரையாடப்பட்டது. இதில் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், குழந்தை நல குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு பொது செயலாளர் கிரிஜா குமார்பாபு, கோவை அமிர்தா பல்கலைக்கழகம் பேராசிரியர் சுஜா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.