கோவையில் புதிதாக உதயமாகியுள்ள ஓசன் ஜேஸ்பர் என்னும் துணிக்கடை திறப்பு விழா வியாழனன்று (இன்று) நடைபெற்றது. அக்ரம் மாலிக் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில், தமிழ் சினிமா உலகின் புன்னகை இளவரசி என்றழைக்கப்படும் நடிகை ஸ்னேகா சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

ஓசன் ஜேஸ்பர் ஏற்கனவே தைக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்வதை தவிர்த்து புதுவிதமாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை வடிவமைத்து விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் விற்பனை செய்யப்படுவதைப் போன்று விலையுயர்ந்த, தரமான ஆடைகள் விற்பனைக்காக இடம்பெற்றுள்ளன. குறைந்தது ரூபாய் 2 ஆயிரத்து 500 முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் வரையிலாக ஆடைகள் ஓசன் ஜெஸ்பரில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், திருமண ஆடைகள் பிரிவில் குறைந்தது 12 ஆயிரத்து 500 ரூபாய் முதல் ஆடைகள் இடம்பெற்றுள்ளன.
