கோவையில் திமுகவினர் 1000 ரூபாய் நோட்டின் மாதிரியை பாடை கட்டி ஆர்ப்பாட்டம்!

கோவையில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது திமுகவினர் 1000 ரூபாய் நோட்டின் மாதிரியை பாடை கட்டி எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.இந்த அறிவிப்பினால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டதுடன், பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் அலைந்து திரியவேண்டி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஓரு பகுதியாக தி.மு.க சார்பில் இன்று மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகின்றது. கோவையில் நஞ்சப்பா சாலையில் துவங்கி கிராஸ்கட் வீதி வரை திமுகவினர் திரண்டு நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநகர் முழுதும் இருந்து திமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது பேட்டியளித்த பொங்கலூர் பழனிச்சாமி, மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் 500 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய் அதிகளவு புழக்கதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், 1000 ரூபாய் நோட்டின் மாதிரி ஒன்றை பாடையில் கட்டி எடுத்து வந்து சங்கு ஊதியும், மேளம் முழங்கவும் ஒப்பாரி வைத்தனர். இதனால் போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...