மாநகராட்சி ஆணையர் உத்தரவால் 452 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாநகராட்சி வரி செலுத்தாத 452 குடிநீர் இணைப்புகள் அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 23ம் தேதி வரை துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்க், தபால் நிலையம், பாலகம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 24ம் தேதி நள்ளிரவு வரை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கோவை மாநகராட்சியின் சார்பில் மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி, சொத்துவரி உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களிலேயே செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவித்திருந்தார். 

இதனிடையே, கடந்த அக். 27ம் தேதி முதல் நவ. 23ம் தேதி வரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் மாநகராட்சி வரி செலுத்தாமல் இருந்த வரிதாரர்களின் 452 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய மண்டலம் 51-ஆம் வார்டு பகுதியில் 2013 முதல் 2017 வரை மாநகாட்சி வரியாக 2 லட்சத்து 52 ஆயிரத்து 340 ரூபாய் செலுத்தாத வணிக வளாகத்தின் முன்பு மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



அக்கடையின் உரிமையாளர் உரிய வரிப்பணத்தினை செலுத்தியபின் அந்த குப்பைத் தொட்டிகள் அங்கிருந்து அகற்றப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...