கோவை உக்கடம் பகுதியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக அவ்வழியே சென்ற ஒருவர் பெரியகடை வீதி போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், உக்கடம் பகுதியை சேர்ந்த அமானுல்லா என்பவரது மகன் ஜான்ஷா (33) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 500கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், உக்கடம் பகுதியை சேர்ந்த அமானுல்லா என்பவரது மகன் ஜான்ஷா (33) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 500கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.