அவிநாசி சாலையில் உள்ள ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் வெள்ளியன்று (இன்று) உடல் உறுப்பு தானம் வாரம் மனித சங்கிலி மூலம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை, கோவை மாநகர சி-2 காவல் நிலையத்தின் காவல்துறை அதிகாரி செல்வராஜ் துவங்கி வைத்தார். இதில், ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை மருத்துவர்கள், நர்ஸிங் மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என சுமார் 400-க்கும மேற்பட்டோர் கலந்து கொண்டு உடல் உறுப்புகளை தானம் செய்யும் விதமாக மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

இதில், ஜி.கே.என்.எம் தலைமை செயல் அலுவலர் ரகுபதி வேலுச்சாமி, இயக்குநர்கள் பாலாஜி, மதன் கோபிநாத் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
