கேரளத்தில் கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்ட்டுகள் குறித்து நீதி விசாரணை நடத்த கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை

கேரள மாநிலத்தில் 3 மாவோயிஸ்ட்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோவையில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக உள்ள மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினார்.



கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015 ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ரூபேஸ், சைனா, வீரமணி, கண்ணன், அனூப் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புசட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு  கோவை முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்த குற்றப்பத்திரிகைகளின் சுமார் 4200 பக்க நகல்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கு வெள்ளியன்று (இன்று) வழங்கப்பட்டது. 

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகின்ற டிசம்பர் மாதம் 8 ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பொறுப்பு கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். 



இதற்கு முன்னதாக, நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட மாவோயிஸ்ட்கள், கேரளாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் 3 பேரை சுட்டுக்கொன்றதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சுட்டு கொல்லப்பட்ட 3 பேரும் போலி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பிறகு மாவோயிஸ்ட்கள் 5 பேர் மீதும் காவல் துறையினர் போலி ஆவணங்களை பயன்படுத்து சிம்கார்டு வாங்கியதாக தமிழகம் மற்றும் கேரளாவில் மொத்தம் 28 பொய் வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் மீது குற்ற வழக்குகள் இல்லாத போதும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும் அவர்களது தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்தார். 

மேலும், மாவோயிஸ்ட்டுகள் மீது சிறையில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும், உரிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமெனவும் நீதிபதியிடம் மாவோயிஸ்ட்கள் புகார் தெரிவித்ததாகவும், சிறை கண்காணிப்பாளர் மூலம் புகார் தெரிவிக்குமாறு நீதிபதி அறிவுறுத்தியதாகாவும் அவர் தெரிவித்தார். 

இதையடுத்து மாவோயிட்கள் 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...