கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்களில் ஈடுபட அனுமதி கோரி விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் மனு


வாங்கிய கடனுக்கு அதிகமாக வங்கிகள் வட்டி வசூலிப்பதால் வங்கிகளுக்கு பணம் செலுத்த கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்களில் ஈடுபட அனுமதி வழங்கக் கோரி விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று (இன்று) விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்தனர். இதனிடையே அன்னூர் அருகே குப்பேபாளையம் பகுதியை சேர்ந்த துப்பாக்கி வேலுசாமி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். 

அம்மனுவில் பயிர்க் கடனுக்கு வங்கிகள் அதிகளவு வட்டியை வசூலிப்பதால் அதனை திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பதாக தெரிவித்திருந்தார். எனவே தனது பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் இல்லையேல் விரைவாக பணம் சம்பாதிக்கும் வகையில் கொள்ளை, திருட்டுகள், கஞ்சா பயிரிடுதல், தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுச்சாமி, காலம்காலமாக விவசாயம் செய்து வரும் தாங்கள் கடந்த சில ஆண்டுகள் வரை சரியான முறையில் வங்கி கடன்களை திரும்ப செலுத்தி அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுள்ளதாக தெரிவித்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து போனது, மின்வெட்டு, உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை உள்ளிட்ட பிரச்சனைகளால் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் வங்கிகளும் வாங்கிய கடனுக்கு மேல் வட்டி கட்டுமாறு மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். 

எனவே, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு முடியாத பட்சத்தில் வேறு வழியின்றி தங்கள் பிள்ளைகள் தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அவல நிலை உருவாகும் எனவும் அவர் அப்போது வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதேபோல, கோவை பேரூர் பகுதியில் வாழை விவசாயம் செய்து வரும் விவசாயி வாழை பயிரிட்டு 1000 வாழைகளை அறுவடை செய்யும் நிலையில் இருப்பதால் மத்திய அரசு அறிவித்தப்படி 2.5 லட்சம் ரூபாய் மட்டுமே வங்கியில் கட்ட முடியும். ஆனால், ஒரு வாழை 500 ரூபாய் வீதம் விற்பனையாகிக்கொண்டிருக்கும் நிலையில் 5 லட்சம் வரும் பணத்தை வங்கியில் வைப்பு வைத்தால் வருமானவரித்துறை பிரச்சனை, வாழையை வாங்குபவர்கள் ரசீது கொடுக்காததால் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசின் கீழ் விவசாயம் சார்ந்த பொருட்களை வாங்குபவர்கள் தங்களது நிறுவனத்தை பதிவு செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...